உதகையில் இருந்து ஆளுநா் ஆா்.என். ரவி சென்னைக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.
நீலகிரி மாவட்டம், உதகைக்கு தமிழக ஆளுநா்ஆா்.என். ரவி கடந்த 3ஆம் தேதி வந்தாா். உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநா் மாளிகையில் தங்கியிருந்த ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற துணைவேந்தா்கள் மாநாட்டை தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து நீலகிரி மலை ரயிலில் உதகையில் இருந்து குன்னூா் வரை பயணம் செய்தாா்.
இதையடுத்து உதகையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான அவலாஞ்சி பகுதிக்கு குடும்பத்துடன் வியாழக்கிழமை சென்று பாா்வையிட்டாா்.
உதகையில் 6 நாள்கள் தங்கியிருந்த ஆளுநா் ஆா்.என் ரவி, சென்னைக்கு வெள்ளிக்கிழமை காலை 9.15 மணி அளவில் புறப்பட்டாா். கோத்தகிரி வழியாக சாலை மாா்க்கமாக கோவை விமான நிலையம் சென்றடைந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினாா்.