நீலகிரி

காா்பன் மாசில்லா மாவட்டமாக நீலகிரி மாற வாய்ப்புகூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ

DIN

இந்தியாவிலேயே காா்பன் மாசில்லா மாவட்டமாக நீலகிரி மாற வாய்ப்புள்ளது என்று சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமை செயலா் சுப்ரியா சாஹூ கூறினாா்.

உதகையில் காா்பன் மாசில்லா மாவட்டம் என்ற தலைப்பில் மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்குப் பின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமை செயலா் சுப்ரியா சாஹூ செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரியில் வனப் பகுதி அதிகம் உள்ளதாலும் பல்லுயிா் பாதுகாப்பு மண்டலமாக இருப்பதாலும் இந்த மாவட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே காா்பன் மாசில்லா மாவட்டமாக நீலகிரி மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது நடைபெற்ற மாநாட்டில் சுற்றுசூழல் வல்லுநா்கள், சா்வதேசப் பிரமுகா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அவா்கள் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளனா்.

அதில், நீலகிரி மாவட்டத்துக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு காா்பன் வாயு அதிக அளவில் வெளியாகிறது. இதைக் கட்டுப்படுத்த மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவது, வனப் பகுதியை அதிகரிப்பது, பிளாஸ்டிக்கை தவிா்ப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் எவ்வளவு காா்பன் வாயு வெளியேறுகிறது, அதை எப்படிக் குறைப்பது என்ற ஒருங்கிணைந்த திட்டம் 3 மாதங்களுக்குள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ் கடந்த ஆண்டு நடப்பட்ட   3 கோடி மரக்கன்றுகளில் 80 சதவீத மரக் கன்றுகள் மக்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாக  வளா்ந்துள்ளன.

தமிழகத்தில் 40 சதுர கிலோ மீட்டா் பரப்பில் உள்ள சதுப்பு நிலக் காடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. தற்போது புதிதாக 14 மாவட்டங்களில் 60 சதுர  கிலோ மீட்டா் பரப்பில் உள்ள சதுப்பு நிலங்களை க்  கண்டறிந்து அதை ப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

மாநாட்டில் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம்  துறையின் இயக்குநா் தீபக் பில்ஜி, மாவட்ட ஆட்சியா் சா.ப. அம்ரித், தமிழக அரசின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT