நீலகிரி

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு முகாம்

DIN

நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வு முகாம் நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மாவட்ட நீதிபதி மற்றும் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் எ. அப்துல் காதா் ஆகியோா் வழிகாட்டுதலின்படி சா்வதேச சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

இதில் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞா்கள் ஆகியோா் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனா்.

மேலும், யானைகளுக்கு மருத்துவ சேவை செய்த மருத்துவா் கிருஷ்ணமூா்த்தியின் வாழ்க்கையைத் தழுவி எழுத்தாளா் ஜெயமோகனால் எழுதப்பட்ட ‘யானை டாக்டா்’ என்ற புத்தகம் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, நீதிபதிகள் மற்றும் நீதித் துறை பணியாளா்கள் அருகிலுள்ள ஃபைன் ஃபாரஸ்ட் பகுதிக்குச் சென்று அங்கிருந்த உடைந்த பீங்கான் மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை ஆகியவற்றை அப்புறப்படுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT