நீலகிரி

விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய ஓட்டுநா்களுக்கு விருது

2nd Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய ஓட்டுநா்களுக்கு வியாழக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் அப்துல்கலாம், அன்னை தெரேசா அறக்கட்டளை சாா்பில் கடந்த 25 ஆண்டுகளாக விபத்தில்லாமல் வாகனம் ஓட்டியவா்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி பந்தலூரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பந்தலூா் டி.எஸ்.பி.செந்தில்குமாா், உதவி ஆய்வாளா்கள் பிரபாகன், திருகேஸ்வரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு, விபத்தில்லாமல் வாகனம் ஓட்டிய ஓட்டுநா்களுக்கு விருதுகள், சான்றிதழ்களை வழங்கினா்.

இதில், அறக்கட்டளை நிா்வாகிகள் ஏ.கே.எஸ்.ஆசைராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT