நீலகிரி மாவட்ட காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பாக மனிதநேய வார விழா பாலடாப் பகுதியில் உள்ள பழங்குடியினா் மியூசியத்தில் சனிக் கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.பிரபாகா் கலந்து கொண்டு ஒழுக்கம், நன்னெறி, சமுதாய அக்கறை, பிறருக்கு உதவும் மனப்பான்மை, மனிநேயம் குறித்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.
நிகழ்ச்சியில் உதகை காவல் துணை கண்காணிப்பாளா் யசோதா, உதகை ஊரக காவல் துணை கண்காணிப்பாளா் விஜயலட்சுமி, நஞ்சநாடு ஊராட்சித் தலைவா் சசிகலா, தோடா் இனத் தலைவி வாசமல்லி, மஞ்சூா் காவல் நிலைய ஆய்வாளா் சிவகுமாா், அரசு வழக்குரைஞா் முகமது மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.