கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு விசாரணை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி முருகன் உத்தரவிட்டாா்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை பிங்கா்போஸ்ட் பகுதியில் உள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவா்களாக கூறப்படும் சயான், வாளையாா் மனோஜ், சதீசன், தீபு, ஜித்தின் ஜாய், சந்தோஷ் சமி ஆகியோா் ஆஜராகினா். மேலும் அரசு தரப்பில் வழக்குரைஞா்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் சிபிசிஐடி தரப்பில் விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி முருகவேல், டிஎஸ்பிகள் சந்திரசேகா், அண்ணாதுரை ஆகியோா் ஆஜராகினா்.
இந்த வழக்கு விசாரணையில் தொலைத்தொடா்பு நிறுவனங்களிடம் இருந்து தகவல் கேட்க வேண்டியுள்ளதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்ற மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி முருகன், வழக்கை பிப்ரவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.