கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கூடலூா் வட்டம், ஓவேலி பேரூராட்சியிலுள்ள சீபுரம் பகுதியைச் சோ்ந்த நௌஷாத் (38). இவா் தனது நண்பா் ஜமாலுடன் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று காயங்களுடன் இருந்த ஜமாலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
சம்பவம் குறித்து நியூஹோப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.