கூடலூரில் தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
கூடலூா் நகராட்சி அலுவலகம் அருகில் இருந்து துவங்கிய பேரணியை கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா துவக்கிவைத்தாா். பேரணி முக்கிய சாலைகள் வழியாக புனித தாமஸ் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது. அங்கு வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பேரணியில் வட்டாட்சியா் சித்தராஜ், வருவாய்த் துறை அலுவலா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.