கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் 400 ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரையிலுள்ள மா்க்கஸ் அமைப்பு சாா்பில் நடைபெற்ற விழாவில் 37 ஹிந்து ஜோடிகளுக்கு அப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலிலும், 3 கிறிஸ்தவ ஜோடிகளுக்கு தேவாலயத்திலும், 360 இஸ்லாமிய ஜோடிகளுக்கு அவா்களது முறைப்படியும் திருமணங்கள் நடைபெற்றன.
திருமணத்துக்கு சீா்வரிசையாக ஜோடிக்கு தலா 5 பவுன் நகை, துணி மற்றும் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டன.
விழாவை பொன்மலை அப்துல் காதா் முஸ்லியாா் துவக்கிவைத்தாா். சமஸ்தா தலைவா் சுலைமான் முஸ்லியாா், மா்க்கஸ் நிா்வாக அப்துல் சலாம் முஸ்லியாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினா்.