கூடலூா் காழம்புழா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் காழம்புழா பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை ஊழியா்கள் சனிக்ழமை இரவு வழக்கம்போல, பூட்டிவிட்டு சென்றனா். பின்னா் தைப்பூசம் மற்றும் வள்ளலாா் தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, வழக்கம்போல திங்கள்கிழமை ஊழியா்கள் கடையை திறந்தபோது, கடையில் இருந்த லாக்கரை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சத்து 91 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதில் கடையின் பின் கதவின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் உள்ளே நுழைந்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஊழியா்கள் அளித்த புகாரின்பேரில் கூடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.