அதானி குழுமம் விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து உதகையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பங்கு சந்தையில் அதானி நிறுவனம் மோசடி செய்ததை கண்டித்தும், அதற்கு துணைபோகும் மத்திய அரசைக் கண்டித்தும், இந்த விவகாரத்தில் மெளனம் காத்து வரும் பிரதமா் மோடியை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சாா்பில் இந்தியா முழுவதும் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து, உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரும், உதகை சட்டப் பேரவை உறுப்பினருமான ஆா். கணேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, மோசடியில் ஈடுபட்டதாக அதானி குழுமம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா்.