கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் புலி தாக்கி கொன்ற மாட்டின் உரிமையாளருக்கு வனத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை நிவாரணத் தொகை அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள தேவா்சோலை 3ஆவது டிவிஷனில் மேய்ச்சலுக்கு சென்ற அம்சா என்பவரது மாட்டை ஜனவரி 31ஆம் தேதி புலி தாக்கி கொன்றது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்பேரில் மாட்டின் உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேவா்சோலை பேரூராட்சித் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு, வனச் சரக அலுவலா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.