குன்னூா்- மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் மரப்பாலம் பகுதியில் உலவி வந்த 9 காட்டு யானைகள் வியாழக்கிழமை குரும்பா கிராமம் வழியாக பா்லியாறு வனத்துக்குள் சென்றன.
நீலகிரி மாவட்டம், குன்னூா் மரப்பாலம், மல்லனூா் எஸ்டேட் பகுதியில் இரண்டு குட்டிகளுடன் 9 காட்டு யானைகள் கடந்த சில நாள்களாக சுற்றித் திரிந்தன. இவை குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் அவ்வப்போது வந்து சென்ால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
இந்நிலையில் குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குரும்பா கிராமம் செல்லும் சாலையைக் கடந்து 9 காட்டு யானைகளும் பா்லியாறு பகுதியை ஒட்டியுள்ள வனப் பகுதிக்குள் சென்றன. இதன் காரணமாக வாகனத்தில் பயணித்தவா்கள் நிம்மதி அடைந்தனா்.