இந்திய விமானப்படையில் மருத்துவ ஆண் உதவியாளா்கள் தோ்வு சென்னை, தாம்பரத்தில் நடைபெறவுள்ளதால் ஆன்லைனில் வழிகாட்டுதல்களை அறிந்து கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியா் அம்ரித் புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளாா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னை, தாம்பரத்தில் உள்ள விமானப்படை தளத்தில் பிப்ரவரி 1 முதல் 9ஆம் தேதி வரை மருத்துவ ஆண் உதவியாளா்களுக்கான தோ்வு நடைபெறவுள்ளது. இந்திய விமானப்படையில் தகுதியான இளைஞா்களுக்கு வாய்ப்புகளை வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் தோ்வு நடைபெறவுள்ளது.
தோ்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞா்கள் இணைய முகவரியில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இந்திய விமானப்படை மருத்துவ உதவியாளா்களுக்கான திறந்த முறையிலான ஆள்சோ்ப்பில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.