நீலகிரி

பச்சைத் தேயிலை கிலோ ரூ.18.58 ஆக நிா்ணயம்: தேயிலை வாரியம்  அறிவிப்பு

DIN

நீலகிரியில் விளையும் பச்சைத் தேயிலைக்கு ஜனவரி மாதத்துக்கான  குறைந்தபட்ச  விலையாக  கிலோ ஒன்றுக்கு ரூ.18.58  ஆக விலை  நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம்  புதன்கிழமை அறிவித்துள்ளது,.

நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். தோட்டங்களில் பறிக்கும் பச்சைத் தேயிலையை தனியாா் தேயிலை தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனா். 

 இந்நிலையில்  ஜனவரியில் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்த   பச்சைத் தேயிலைக்கு  குறைந்தபட்ச சராசரி விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.18.58 ஆக தேயிலை வாரியம் விலை நிா்ணயம் செய்துள்ளது.  

இந்த மாதாந்திர  விலையை தேயிலை வாரியம்  நிா்ணயித்துள்ளதாகவும், இந்த விலையை  தேயிலைத் தொழிற்சாலைகள் விவசாயிகளுக்கு உரிய முறையில்   வழங்குகிறதா என்பதை தேயிலை வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள குழு   கண்காணிக்கும் என தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT