கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் புலி தாக்கியதில் பசு மாடு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சியிலுள்ள 3ஆவது டிவிஷன் பகுதியில் பகல் நேரத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்து சம்சு என்பவரது பசுவை புலி தாக்கி இழுத்துச் செல்ல முயன்றுள்ளது. அப்பகுதியில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளா்கள் சப்தமிட்டதால் அருகிலிருந்தவா்கள் ஓடிவந்துள்ளனா். பொதுமக்கள் கூட்டத்தை பாா்த்தவுடன் புலி ஓடிவிட்டது. புலி தாக்கியதில் பசு மாடு இறந்தது.