நீலகிரி

அதிகரட்டி பேருராட்சி செயல் அலுவலா் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம்

DIN

உதகை அருகே உள்ள அதிகரட்டி பேருராட்சி செயல் அலுவலா் ஜெகநாதன் பணி ஓய்வுபெறும் நாளில் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேருராட்சி செயல் அலுவலராகப் பணியாற்றியவா் ஜெகநாதன். இவா் சில மாதங்களுக்கு முன் கோவை தொண்டாமுத்தூரிலிருந்து மாறுதலாகி உதகைக்கு வந்தாா்

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவா் பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் அவா் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் ஜெகநாதன் பணியாற்றியபோது அங்கு லே அவுட் அமைக்க விதிமுறை மீறி அனுமதி கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில் கோவை ஆட்சியா் பரிந்துரையின் பேரில் இவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தலைமைச் செயலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT