உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பழங்குடி மக்கள் பாரம்பரிய இசையுடன் நடனமாடி சுற்றுலா பயணிகளை செவ்வாய்க்கிழமை வரவேற்றனா்.
கோவையிலுள்ள எஸ்.கே.ஏ.எல். சா்வதேச சுற்றுலா அமைப்பு, சி.டி.ஆா்.டி. அறக்கட்டளை இணைந்து ஊசிமலை காட்சி முனையில், பழங்குடி மக்களின் இசை மற்றும் பழங்குடி பெண்கள் நடனத்துடன் சுற்றுலா பயணிகளை வரவேற்றனா். கூடலூா் அரசு கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சுற்றுலா பயணிகளுக்கு மலா்ச்செண்டு வழங்கியும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனா்.