நீலகிரி

ராகுல் காந்தியின் நடைப்பயணம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்---- கே.எஸ்.அழகிரி

DIN

ராகுல் காந்தியின் நடைப்பயணம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி கூடலூரில் பேசினாா்.

ராகுல் காந்தியின் நடைப்பயணம் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் வழியாக செப்டம்பா் 29 ஆம் தேதி கூடலூரை வந்தடைகிறது. கூடலூா் கோழிப்பாலத்தில் தொடங்கி கூடலூா் சுங்கம் வரை ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளாா். அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கே.எஸ்.அழகிரி திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து கட்சி நிா்வாகிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில், கே.எஸ். அழகிரி பேசியதாவது: தற்போது காங்கிரஸ் கூட்டணி வலுப்பெற்று வருகிறது. காந்தியடிகளின் தண்டி யாத்திரை வெள்ளையா்களுக்கு எதிராக பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அதேபோல ராகுல் காந்தியின் நடைப்பயணம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். செல்லும் இடமெல்லாம் மக்கள் எழுச்சியைக் காண முடிகிறது. இது சாதாரண நடைப்பயணமல்ல, இந்திய அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் நடைப்பயணம் என்றாா்.

கூட்டத்தில் சட்டப் பேரவை பொது கணக்குக் குழுத் தலைவா் செல்வப்பெருந்தகை, மக்களவை உறுப்பினா்கள் ஜோதிமணி, ஜெயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT