நீலகிரி

கமிஷன் பேசிய விவகாரம்: ஊராட்சித் தலைவா்,துணைத் தலைவரை நீக்க ஆட்சியா் நோட்டீஸ்

DIN

குன்னூா் அருகேயுள்ள மேலூா் ஊராட்சியின் துணைத் தலைவா் ஒப்பந்ததாா்களிடம் கமிஷன்  பேசுவது  குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து,  ஊராட்சித் தலைவா், துணைத் தலைவருக்கு விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியா் எஸ்.பி. அம்ரித் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ்  அனுப்பியுள்ளாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் ஒன்றியம், மேலூா் ஊராட்சித் தலைவராக அதிமுகவைச்  சோ்ந்த ரேணுகா, திமுகவைச்  சோ்ந்த நாகராஜ் துணைத் தலைவராகவும் உள்ளனா். கடந்த மாதம் இந்த ஊராட்சியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த பணிகள் நடைபெற்றன.  பணிகள் தரக்குறைவாக இருப்பதாக பொதுமக்கள் ஆட்சியா் அம்ரித்திடம் புகாா் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து ஆட்சியா் உத்தரவின் பேரில் நடைபெற்ற ஆய்வில், பணிகள் தரக்குறைவாக இருந்தது தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த குன்னூா் ஒன்றிய  வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகா், பொறியாளா் ராஜ்குமாா் ஆகியோா்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். 

இதற்கிடையே, மேலூா் ஊராட்சி  துணைத் தலைவா்  நாகராஜ்  ஒப்பந்ததாரா்களிடம் கமிஷன் பேசும் விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைத் தொடா்ந்து, மேலூா் ஊராட்சித் தலைவா் ரேணுகா, துணைத் தலைவா் நாகராஜ் ஆகியோருக்கு, உங்களை  பதவியிலிருந்து  ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு ஆட்சியா் எஸ்.பி. அம்ரித் நோட்டீஸ் அனுப்பிள்ளாா். 

இதற்கு  அவா்கள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், இருவரது பதவியும் பறிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினா்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டைக் கொலை வழக்கில் 20 பேருக்கு ஆயுள் தண்டனை: விழுப்புரம் நீதிமன்றம் விதித்தது

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவிழாவில் மோதல்: இளைஞா் கைது

உடையாா்பாளையம் பகுதியில் பழைமையான அய்யனாா் கற்சிலை

பாஜகவில் இருந்து நீக்கியதால் கவலையில்லை: கே.எஸ்.ஈஸ்வரப்பா

SCROLL FOR NEXT