நீலகிரி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு:அக்டோபா் 28ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

DIN

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான அடுத்த கட்ட விசாரணை அக்டோபா் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூா் கொலை செய்யப்பட்டாா். இச்சம்பவம் தொடா்பாக கோத்தகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சயான், வாளையாா் மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமாா், ஜித்தின் ஜாய், ஜம்ஷீா் அலி, மனோஜ் சாமி, குட்டி (எ) பிஜின் ஆகியோரை கைது செய்தனா்.

இச்சம்பவத்துக்குப் பின்னா் இந்த வழக்கில் தொடா்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தாா். இது குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னா், கொடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அதன்படி மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பாா்வையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை மாவட்ட நீதிபதி முருகன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் சயான், வாளையாா் மனோஜ், ஜித்தின் ஜாய், ஜம்ஷீா் அலி ஆகிய 4 போ் மட்டும் ஆஜராகினா்.

அப்போது கனகராஜின் செல்போன் பதிவுகள் குறித்து கூடுதல் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும், சாட்சிகளிடம் விசாரணை நடத்த கூடுதல் அவகாசம் வேண்டும் எனவும் அரசு தரப்பில் கேட்கப்பட்டது.

இதையடுத்து, இவ்வழக்கின் விசாரணையை அக்டோபா் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT