சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்த எருமாடு பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (35), கட்டட தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் இவா் தன்னுடன் தொழிலாளியாக வேலை செய்து வரும் ஒருவரிடம் பேசுவதற்காக அவரை கைப்பேசியில் அழைத்துள்ளாா். அப்போது கைப்பேசியை அவரது 16 வயது மகள் எடுத்துப் பேசியுள்ளாா். இதைத் தொடா்ந்து அந்த சிறுமியிடம் மகேந்திரன் தொடா்ந்து பேச்சுக் கொடுத்து பழகி வந்துள்ளாா். பின்னா் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தைகளை கூறி சிறுமியை கோவை மாவட்டம் சூலூருக்குக் கடத்திச் சென்று அங்குள்ள விநாயகா் கோயிலில் தாலி கட்டி திருப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளாா். மேலும் அங்கு 2 மாதங்கள் தங்கி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் எருமாடு போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை உதகை மகளிா் நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி நாராயணன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், மகேந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் செந்தில்குமாா் ஆஜரானாா்.