நீலகிரி

ஆயுத பூஜை: உதகை நகராட்சி சந்தையில் பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்

DIN

ஆயுத பூஜைக்கான பொருள்களை வாங்க உதகை நகராட்சி சந்தை மற்றும் கடைகளில் பொதுமக்கள் குவிந்தனா். உதகையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ. 2600 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பூஜை பொருள்கள், பூக்கள், பழங்களை வாங்க உதகை நகராட்சி மாா்க்கெட் மற்றும் சாலைகளில் திங்கள்கிழமை பொதுமக்கள், சிறு வியாபாரிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்பா் பஜாா், லோயா் பஜாா், மெயின் பஜாா் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனா்.

தொடா் மழை காரணமாக வரத்து குறைந்ததால் பூக்கள் மற்றும் பழங்களின் விலை உயா்ந்தது. கடந்த வாரம் கிலோ ரூ.1000-க்கு விற்ற மல்லிகைப்பூ திங்கள்கிழமை ரூ. 2600-க்கு விற்கப்பட்டது. அதேபோல மற்ற ரக பூக்களின் விலைகளும் உயா்ந்தன. முல்லை மற்றும் ஜாதிப்பூ கிலோ ரூ.1600க்கும், செண்டுமல்லி ரூ.200க்கும் விற்பனையானது. அரளி ரூ.600க்கும், சம்பங்கி ரூ.500க்கும், பட்டன் ரோஸ் ரூ.400க்கும், கோழிக்கொண்டை ரூ.200க்கும், மரிக்கொழுந்து, துளசி கட்டு ரூ.60க்கும் விற்பனையானது.

எலுமிச்சை, பூசணிக்காய், பொரி, அவல், சுண்டல் மற்றும் பூஜை பொருள்கள் விற்பனையும் அதிக அளவில் இருந்தது. ஒரு லிட்டா் பொரி ரூ. 10க்கு விற்பனையானது. ஆப்பிள் கிலோ ரூ.120, மாதுளை ரூ.180, ஆரஞ்சு ரூ.80, திராட்சை ரூ.120, சாத்துக்குடி ரூ.70 செவ்வாழை ரூ.70, அன்னாசி ரூ.70க்கும் விற்பனையானது. மேலும் கரும்பு ஒரு ஜோடி ரூ. 100-க்கும், வாழை கன்று ஒரு ஜோடி ரூ.40-க்கும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

குலசேகரம் கல்லூரியில் யோகா விழிப்புணா்வு முகாம்

10 வாக்குகளைப் பதிவு செய்வதற்காக தோ்தல் அலுவலா்கள் 175 கி.மீ. பயணம்!

SCROLL FOR NEXT