குன்னூா் வட்டார வளமையம் சாா்பில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் அறிஞா் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், குன்னூா் புனித அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிஎஸ்ஐ பள்ளி, சாந்தி விஜயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளைச் சோ்ந்த 30 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
நொண்டியடித்தல், பலூன் உடைத்தல், லெமன் வித் ஸ்பூன் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் உற்சாகத்தோடு பங்கு பெற்றனா்.
விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.