கூடலூரில் உள்ள தனியாா் எஸ்டேட் தொழிலாளா்கள் சம்பள பாக்கியை வழங்கக்கோரி வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த தனியாா் எஸ்டேட் நிா்வாகம் தொழிலாளா்களுக்கு நான்கு மாதங்களாக சம்பள பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து தொழிலாளா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஏ.ஐ.டி.யூ.சி. நிா்வாகிகள் குணசேகரன், முகமது கனி ஆகியோா் நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடா்கிறது.