நீலகிரி

அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து: இருவா் காயம்

DIN

குன்னூா்  அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் வியாழக்கிழமை குழாய் வெடித்ததில் இருவா் படுகாயமடைந்தனா்.

நீலகிரி மாவட்டம் , குன்னூா்  அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் வெடி மருந்துகள் நாட்டின் பல்வேறு ராணுவ முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் உள்ள பழைய மெஷினில்  வெல்டிங் வேலை வியாழக்கிழமை நடந்து கொண்டிருந்தது. அப்போது  திடீரென மெஷினில் இருந்த குழாய் வெடித்தது. இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மனோஜ், இமாம் சூ ஆகிய  பாதுகாப்பு பணியாளா்களுக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக இவா்கள் இருவரும்  வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இங்கு கடந்த நவம்பா் 19ஆம் தேதி நடந்த வெடி விபத்தில் 8 போ்  லேசான காயம்   அடைந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாம் தமிழா் கட்சிக்கு திருப்புமுனை: மரிய ஜெனிபா்

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேரன்மகாதேவியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு

காரையாறு வனப்பகுதியில் ஆா்வமுடன் வாக்களித்த காணி மக்கள்

நெல்லையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT