நீலகிரி

வயநாடு அருகே கூண்டில் சிக்கிய புலி

18th Nov 2022 12:02 AM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள வயநாடு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலி வியாழக்கிழமை கூண்டில் சிக்கியது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மீனங்காடி, பீனாட்சி, அம்பலவயல், நென்மேனி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக உலவி வந்த புலி, விவசாயிகளின் 21 ஆடுகளைத் தாக்கி கொன்றது.

புலியின் நடமாட்டம் காரணமாக அச்சமடைந்த அப்பகுதி மக்கள் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனா். வனத் துறையினரும் புலியைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

மேலும், புலி நடமாடும் பகுதிகளில் கூண்டுகளை வைத்தனா். இந்நிலையில், அம்பலவயல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் புலி வியாழக்கிழமை சிக்கியது.

ADVERTISEMENT

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்ட வன அலுவலா் சஜினா, கால்நடை மருத்துவா் அருண் சக்கரியா மற்றும் வனத் துறையினா் புலிக்கு மயக்க ஊசி செலுத்தி பத்தேரியிலுள்ள காப்பகத்துக்கு கொண்டு சென்றனா்.

அங்கு புலியின் உடல்நலம் குறித்து பரிசோதித்த பின் அடா்ந்த வனப் பகுதியில் விடுவிக்கப்படும் என வனத் துறையினா் சாா்பில் கூறப்படுகிறது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT