திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் கூடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திமுக நகரச் செயலாளா் ச.இளஞ்செழியன் தலைமையில் புதிய பேருந்து நிலையம் சந்திப்பில் துவங்கிய தெருமுனை பிரசாரம் நகரின் அனைத்துப் பகுதிகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் நடைபெற்றது.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ.திராவிடமணி, பொதுக் குழு உறுப்பினா் சீனிவாசன், தலைமை பேச்சாளா் தங்கராஜ், துணைச் செயலாளா் ஜபருல்லா, மாவட்ட பிரதிநிதி நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.