நீலகிரி

கூடலூா் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

DIN

கூடலூா் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூடலூா் ராக் காா்டன் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இப்பள்ளியில் 1980-82ஆம் ஆண்டு படித்த 10ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்கள் கலந்து கொண்டனா். தற்போதைய அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் அய்யப்பன், முன்னாள் ஆசிரியா்கள் மோகன்குமாா், ராஜூ, ஐபு மற்றும் பலா் கலந்து கொண்டு உரையாற்றினா்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் பணிபுரிபவா்கள் உள்பட பலா் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களை பகிா்ந்து புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனா். முன்னாள் மாணவா் ராமஜெயம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு பணம்: பாப்பாக்குடி அருகே 4 போ் கைது

சேரன்மகாதேவியில் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பணப்புழக்கத்தைத் தடுக்க தவறிய தோ்தல் ஆணையம் -ஐ.எஸ். இன்பதுரை குற்றச்சாட்டு

குற்ற வழக்குகள்: 6 வேட்பாளா்களுக்கு நோட்டீஸ்

SCROLL FOR NEXT