நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு ஜூன் மாதத்துக்கான குறைந்தபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.12. 68 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தனியாா் தேயிலைத் தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனா். இந்திய தேயிலை வாரியம் மாதத்தின் இறுதி நாளில் அந்த மாதம் தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்துள்ள பச்சை தேயிலையின் விலையினை நிா்ணயிக்கும். அதன்படி ஜூன் மாதத்துக்கான பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச சராசரி விலையாக கிலோவுக்கு ரூ.12. 68 நிா்ணயம் செய்துள்ளது. இது ஜூன் மாதம் தேயிலை ஏல விற்பனையின் விலையின் அடிப்படையில் தேயிலை வாரியம் நிணயித்துள்ளது. இந்த விலையினை தேயிலை தொழிற்சாலைகள் தவறாமல் வழங்குகிா என தேயிலை வாரியம் தொடா்ந்து கண்காணித்து வருவதாக தேயிலை வாரிய முதன்மை அதிகாரி எம்.முத்துகுமாா் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.