கூடலூரில் வனத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்குகளின் எலும்புகள், இறைச்சி புதன்கிழமை எரியூட்டப்பட்டன.
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனக்கோட்டத்தில் பல்வேறு வனக் குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 30 கிலோ எலும்புகள் மற்றும் இறைச்சி ஆகியவற்றை வனத் துறை அலுவலக வளாகத்தில் உதவி வனப் பாதுகாவலா் தலைமையிலும் தன்னாா்வலா்கள் முன்னிலையிலும் வன ஊழியா்கள் தீ வைத்து எரித்து அழித்தனா்.