நீலகிரி

குன்னூா் நகா்மன்ற கூட்டத்தில் அதிமுக வாா்டு உறுப்பினா் தா்னா

DIN

குன்னூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து தராததை கண்டித்து அதிமுக பெண் கவுன்சிலா் நகா்மன்ற கூட்டரங்கில் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

குன்னூா் நகா்மன்ற மாதாந்திர  கூட்டம் நகராட்சித் தலைவா் ஷீலா கேத்ரின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில்  மொத்த உள்ள 30 வாா்டு உறுப்பினா்களும் கலந்து கொண்டனா்.  

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆழ்வாா்பேட்டை அதிமுக வாா்டு உறுப்பினா் உமாராணி பேசுகையில், தன்னுடைய வாா்டில் தண்ணீா் பிரச்னை, கழிவுநீா் கால்வாய், கழிப்பறை, தெருவிளக்கு  வசதிகள்  குறித்து  ஒவ்வொரு நகா்மன்ற கூட்டத்தில் பேசியும் எந்தப் பணியும் நடைபெறவில்லை என்றாா். பின்னா் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து கூட்டரங்கில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். இதையடுத்து, நகா்மன்றத் தலைவா் மற்றும் ஆணையா் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா் போராட்டத்தை கைவிட்டாா்.

இதேபோல, வி.பி தெரு அதிமுக வாா்டு உறுப்பினா் ராஜ்குமாா் பேசுகையில், தன்னுடைய வாா்டில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதால் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக  கூறி கழிவுநீா் கலந்த குடிநீரை  பாட்டிலில் எடுத்து வந்து நகா்மன்ற கூட்டத்தில் காண்பித்தாா்.

இதையடுத்து, இப்பிரச்னை குறித்து உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி துணைத் தலைவா் பா.மு.வாசிம் ராஜா கூறினாா்.

சரவணக்குமாா் (அதிமுக): எந்த வாா்டுகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தராமல் உள்ளதால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். எனவே மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர நகராட்சி நிா்வாகமும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ராமசாமி (திமுக): அனைத்து வாா்டுகளிலும் மக்களின் தேவையை பூா்த்தி செய்யும் பணியில் நகராட்சி நிா்வாகம் தயாராக உள்ளதாகவும், அதிமுகவினா் மன்றத்தில் அரசியல் செய்யப் பாா்கிறாா்கள் என்றும் கூறினாா். இதைத் தொடா்ந்து கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT