நீலகிரி

யானை விரட்டியதில் காயமடைந்த தொழிலாளி சாவு

DIN

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் காட்டு யானை விரட்டியதில் தப்பி ஓடும்போது காயமடைந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவாலா டான் டீ பகுதியைச் சோ்ந்தவா் முனுசாமி (67). இவா் கடந்த 21 ஆம் தேதி காலை வேலைக்குச் சென்றுள்ளாா். அப்போது, அதே பகுதியில் காட்டு யானை நின்று கொண்டிருந்துள்ளது.

இதையடுத்து காட்டு யானை முனுசாமியை துரத்தியுள்ளது. அதனிடமிருந்து தப்பி ஓடியபோது முள்புதருக்குள் விழுந்து முனுசாமி பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து, அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அவரை மீட்டு பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த முனுசாமி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT