அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து உதகையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய ராணுவத்தில் முப்படைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற அக்னிபத் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்கீழ் விமானப் படை மற்றும் கடற்படையில் சேர விரும்பும் இளைஞா்கள் கடந்த வாரம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஆனால், இந்த திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, உதகையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு உதகை சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.கணேஷ் தலைமை வகித்தாா்.
இதில், 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்துகொண்டனா்.