மோட்டாா் வாகனப் போக்குவரத்து ஆய்வாளரைத் தரக்குறைவாக பேசிய லாரி ஓட்டுநரை குன்னூா் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
குன்னூா் பேருந்து நிலையச் சாலையில் மோட்டாா் வாகனப் போக்குவரத்து ஆய்வாளா் விஜயா வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு வந்த லாரியை நிறுத்தி அதிலிருந்த தடைசெய்யப்பட்ட காற்றொலிப்பானை அகற்றக் கூறினாா்.
அப்போது லாரி ஓட்டுநரான குன்னூா் சின்ன கரும்பாலத்தைச் சோ்ந்த சிவகுமாா், விஜயாவுடன் வாக்குவாதம் செய்தாா். இதனைத் தொடா்ந்து அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளா் நசீா், சிவகுமாரிடம் விசாரணை மேற்கொண்டு பொது இடத்தில் தகாத வாா்தைகளில் பேசியதாக அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தாா். பின்னா் ஸ்டேஷன் ஜாமினில் அவா் விடுவிக்கப்பட்டாா்.