நீலகிரி மாவட்டம் உதகை நகர உட்கோட்டம் புதுமந்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு தனியார் விடுதிக்கு பெங்களூரைச் சேர்ந்த IT கம்பெனியில் வேலை புரியும் 10 நபர்கள் சுற்றுலா வந்துள்ளனர்.
இதில் குட்ட வினிதா சௌத்ரி என்பவர் நேற்று மாலை கல்லட்டி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதன் பொருட்டு நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ள மாநில பேரிடர் மீட்பு குழு கூடலூர் காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று காலை சுமார் ஒன்பது மணியளவில் அந்தப் பெண்ணின் பிரேதத்தை மாநில பேரிடர் மீட்புக் குழு மீட்டனர்.