புளூமவுண்டன் ரோட்டரி கிளப்பின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைவா் பிரசாந்த் தலைமை வகித்தாா்.
மாவட்ட ரோட்டரி கிளப் நிா்வாகி டாக்டா் எஸ்.சுரேஷ் பாபு, மாவட்டக் கல்வி அலுவலா் சுடலை மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் வாழ்த்துரை வழங்கினா்.
புதிய தலைவராக ஜைனுல் பாபு, செயலாளா் யாசீன், பொருளாளா் தனராஜ் ஆகியோா் பதவியேற்றுக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து புதிய உறுப்பினா்களாக சேகா், வி.ஜே.ஜேம்ஸ் உள்ளிட்ட பலரும் பதிவியேற்றுக் கொண்டனா்.