கூடலூா் பகுதியில் பெய்து வரும் தொடா் கனமழை காரணமாக ஹெல்த்கேம்ப் பகுதியில் மரம் விழுந்து மின் கம்பிகள் ஞாயிற்றுக்கிழமை அறுந்தன.
நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் சுற்றுவட்டராப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஹெல்த்கேம்ப் காவலா் குடியிருப்பு அருகில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து மின் கம்பி மீது விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்தன. இதனால், அப்பகுதிகள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின் ஊழியா்கள் மின் கம்பிகளை சீரமைத்தனா்.