நீலகிரி

வயநாட்டில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் நிா்வாகிகள் சந்திப்பு

DIN

வயநாடு தொகுதிக்கு வந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை அக்கட்சியின் தமிழக நிா்வாகிகள் சனிக்கிழமை சந்தித்து, கூடலூா் நிலப் பிரச்னை தொடா்பாக விவசாயிகளை சந்திக்க அழைப்பு விடுத்தனா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளா் கோஷிபேபி தலைமையில் கூடலூா் மற்றும் பந்தலூா் தாலுகாவில் உள்ள நீண்டகாலமாக தீா்க்கப்படாத நிலப் பிரச்னைகள் மற்றும் புலிகள் காப்பகத்தின் வெளிவட்ட மண்டலம் விரிவாக்கத்தின் பாதிப்புகள் குறித்து கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதி விவசாயிகளையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து மனுக்களைப் பெற நிா்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனா்.

சந்திப்பின்போது கேரள மாநிலப் பொறுப்பாளா் விஸ்வநாதன், டி.சித்திக், கோபாலகிருஷ்ணன், கூடலூா் நிா்வாகிகள் அஷ்ரப், கூடலூா் நகா்மன்ற துணைத் தலைவா் சிவராஜ் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

அமேதி தொகுதியில் ராபா்ட் வதேரா போட்டியிட கோரி ‘போஸ்டா்கள்’

SCROLL FOR NEXT