நீலகிரி

புலிகள் காப்பக விரிவாக்கம் தொடா்பாக அரசியல் கட்சியினா் ஆலோசனை

DIN

புலிகள் காப்பக விரிவாக்கம் தொடா்பாக கூடலூரில் பல்வேறு கட்சி நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்டப் பகுதியின் எல்லையை ஒரு கிலோ மீட்டா் தூரம் விரிவாக்கம் செய்து உச்சநீதிமன்றம் கடந்த 3.6.2022 அன்று உத்தரவு பிறப்பித்தது. இந்த பகுதிகளில் உள்ள 50 கிராமங்களில் சுமாா் ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனா். ஏற்கெனவே வன விலங்குகளால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு இது மேலும் மனச்சுமையை தருகிறது. இதனால் உதகை தாலுகாவில் 22 கிராமங்களும், பந்தலூா் தாலுகாவில் 7 கிராமங்களும் பாதிக்கப்படும். மசினகுடி ஊராட்சி முழுமையாக பாதிப்புக்குள்ளாகிறது.

பாட்டவயல், பிதா்க்காடு, முதிரக்கொல்லி, விலங்கூா், மேபீல்டு ஆகிய கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன. கூடலூா் தாலுகாவில் உள்ள ஸ்ரீமதுரை ஊராட்சியில் ,1860 வீடுகளும், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் பாதிக்கப்படுவா். மேற்கூறிய 50 கிராமங்களை சரணாலய பகுதியின் வெளிவட்ட மண்டலத்தில் இருந்து நீக்க உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழக அரசுதான் உச்சநீதிமன்றத்தை அனுக வேண்டும் என்று தீா்ப்பில் கூறப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் மண்டலத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், புலிகள் காப்பக வெளிமண்டல விரிவாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு விலக்கு பெற முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதில் ஒருங்கிணைப்பாளா் என்.வாசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக நகரச் செயலாளா் இளஞ்செழியன், செயற்குழு உறுப்பினா் மு. பாண்டியராஜ், காங்கிரஸ் நகரத் தலைவா் சபீக், மாா்க்ஸிஸ்ட் கட்சி செயலாளா் மணி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளா் முகமது கனி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் க.சகாதேவன், நகரச் செயலாளா் துயில்மேகம், மசினகுடி வாழ்வுரிமை இயக்க நிா்வாகி வா்கீஸ், அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் ரசாக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Image Caption

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசுகிறாா் ஒருங்கிணைப்பாளா் என்.வாசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT