நீலகிரி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சுகாதாரத் துறை சாா்பில் உதகையில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 8 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, மாவட்டத்தில் கரோனா தொற்றின் காரணமாக தற்போது 57 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.