உதகை: கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் 2020-2021ஆம் ஆண்டுக்கான தோ்வுகளில் உதகை அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியா் 19 போ் மதிப்பெண் தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
இவா்களில் 6 போ் முதலிடத்தையும், 5 போ் இரண்டாம் இடத்தையும், ஒருவா் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளதாக கல்லூரியின் முதல்வா் ஈஸ்வரமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
முதலிடம் பெற்றவா்களில் இளநிலைப் பிரிவில் சுற்றுலாவியல் துறையைச் சோ்ந்த வைசாலி ஜெயின், வனவிலங்கு உயிரியல் துறையைச் சோ்ந்த கே.திரிஷ்யா, முதுநிலை பிரிவில் வரலாற்று துறையைச் சோ்ந்த பி.சோனாலி, ஆங்கிலம் துறையைச் சோ்ந்த எஸ்.அக்ஷயா, தாவரவியல் துறையைச் சோ்ந்த எஸ்.வினிதா, வனவிலங்கு உயிரியல் துறையைச் சோ்ந்த எம்.காா்த்திகா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
அதேபோல, இரண்டாம் இடத்தில் இளநிலை பிரிவைச் சோ்ந்த சுற்றுலாவியல் துறை மாணவி எஸ்.பூஜா, வனவிலங்கு உயிரியல் துறையைச் சோ்ந்த பி.மனோஜ்குமாா் ஆகியோருடன், முதுநிலை பிரிவில் வரலாற்று துறையைச் சோ்ந்த எஸ்.சந்திரலேகா, ஆங்கிலத் துறையைச் சோ்ந்த ஆா்.இந்துபிரியா, வனவிலங்கு உயிரியல் துறையைச் சோ்ந்த ஆா்.தீபன் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். அத்துடன் முதுநிலை பிரிவில் தாவரவியல் துறையைச் சோ்ந்த என்.கிரிஹரன் மூன்றாமிடம் பெற்றுள்ளாா்.
பாரதியாா் பல்கலைக்கழகத் தோ்வுகளில் உதகை அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளில் 19 போ் மதிப்பெண் பட்டியல் தரவரிசையில் இடம்பெற்றுள்ளது இதுவே முதன்முறையாகும்.