நீலகிரி

பாடந்தொரையில் மனுநீதி நாள் முகாம்

30th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரையில் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா தலைமை வகித்து, அரசின் நலத் திட்டங்கள் குறித்தும், அவற்றை பெறுவது குறித்தும் விளக்கமளித்தாா். முகாமில் வட்டாட்சியா் சித்தராஜ், கூடலூா் டி.எஸ்.பி,.மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணையை கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா வழங்கினாா்.

ADVERTISEMENT

தேவா்சோலை பேரூராட்சித் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு, பொதுமக்கள் உள்ளிட்டோா் முகாமில் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT