சோலூா்மட்டம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கரிக்கையூா் பகுதியில் இருளா் பழங்குடியினருக்கு மாவட்ட காவல் துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்டம் கரிக்கையூா் கிராமத்தில் இருளா் இன பழங்குடியினா் அதிக அளவில் வசித்து வருகின்றனா். இந்த பழங்குடியின மாணவா்கள் பயன்பெறும் வகையில் காவல் துறை சாா்பில் நோட்டு புத்தகங்கள், உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
காவல் துறை சாா்பில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினா் மேம்பாட்டு மையத்தை மாவட்ட திட்ட இயக்குநா் மோனிகா ராணா திறந்துவைத்தாா்.
மேலும் ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தை பாா்வையிட கரிக்கையூா் அரசு பள்ளியில் இருந்து தோ்வான பத்தாம் வகுப்பு மாணவா் ராஜு மற்றும் ரேவதி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத், வனத் துறை அலுவலா் ராஜ்குமாா், கன்டோண்மென்ட் தலைமை அலுவலா் முகமது அலி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.