நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பில், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழாவை மாவட்ட ஆட்சியா் அம்ரித் தொடக்கிவைத்தாா்.
தமிழகம் முழுவதும் சாலைப் பாதுகாப்பு விழா ஆண்டுதோறும் டிசம்பா் மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியா் அம்ரித் பங்கேற்று விழாவைத் தொடக்கிவைத்து, நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு 218 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில், 34 போ் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தாா்.
பின்னா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தலைக் கவசம், சீட் பெல்ட் அணிவது, சாலை விதிகளை மதிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடா்ந்து, சாலைப் பாதுகாப்பு விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்குப் பரிசுகளை ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத், திட்ட மேலாண்மை இயக்குநா் மோனிகா ராணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.