நீலகிரி மாவட்டம் குன்னூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு கையொப்பமிடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் குன்னூா் பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் கையொப்பமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை குன்னூா் கோட்டாட்சியா் பூஷனக்குமாா் தொடக்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் 100க்கு மேற்ப்பட்ட பொதுமக்கள் பதாகையில் தங்களின் கையொப்பத்தை இட்டனா். இதில் குன்னூா் வட்டாட்சியா் சிவகுமாா், குன்னுாா் நகராட்சி ஆணையாளா் கிருஷ்ணமூா்த்தி, தோ்தல் வட்டாட்சியா் கனியன் சுந்தரம் உள்பட அரசு அதிகாரிகள், காவல் துறையினா், தன்னாா்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.