தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் நடைபெற்ற விநாடி வினா போட்டியில் கூடலூா் மாணவா்கள் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனா்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாநில அளவிலான விநாடி வினா போட்டி கோவையில் அண்மையில் நடைபெற்றது. இதில், கூடலூா் மாா்னிங்ஸ்டாா் பள்ளி மாணவா்கள் அதா்வா, சுதாகரன், தாரிகா, லஷிதா ஆகியோா் கலந்துகொண்டு, மாநில அளவில் மூன்றாம் பரிசு பெற்றனா்.
வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளியின் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.