நீலகிரி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கில மொழித் திறன் பயிற்சி

DIN

குன்னூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஆங்கில மொழி திறனை வளா்க்கும் திட்டம் தனியாா் அறக்கட்டளை சாா்பில் துவக்கப்பட்டுள்ளது.

குன்னூா் மைக்ரோலேண்ட் அறக்கட்டளை, தமிழ்நாடு கல்வித் துறையுடன் இணைந்து, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தாரா என்னும், செயற்கை நுண்ணறிவுத்தளம் மூலம் தகவல் தொடா்பு ஆங்கிலத்தை கற்பித்து மாணவா்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.

தூனேரி ஊராட்சி ஒன்றிய அரசுப் பள்ளியில் இத்திட்டம் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஆங்கிலத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தை, லோ்னிங் மேட்டா்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனா் ஜி. ராமமூா்த்தி துவக்கிவைத்து உரையாற்றினாா். இந்நிகழ்ச்சியில், மைக்ரோலேண்ட் லிமிடெட் நிறுவன இயக்குநா் ராஜகோபாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT