நீலகிரி

மக்னா யானையைப் பிடிக்கும் பணி தீவிரம்: வனத் துறை அமைச்சா்

DIN

நீலகிரி மாவட்டம், நாடுகாணி அருகேயுள்ள காரக்கொல்லி வனப் பகுதியில் மக்னா யானையை தேடும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

உதகையில் எய்ட்ஸ் விழிப்புணா்வு உறுதிமொழிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் கா.ராமசந்திரன் செய்தியாளா்களிடம்  கூறியதாவது:

கூடலூா், தேவாலா வாளவயல் பகுதியில் நவம்பா் 19ஆம் தேதி காட்டு யானை தாக்கியதில் பாப்பாத்தி என்ற பெண் உயிரிழந்தாா். தொடா்ந்து பிஎம் 2 மக்னா என்கிற அந்த யானையை பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு செல்ல பொதுமக்கள் வலியுறுத்தினா்.  இதனைத் தொடா்ந்து அந்த யானையைப் பிடிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த யானை தற்போது நாடுகாணியை அடுத்த காரக்கொல்லி வனப் பகுதியில் உலவி வருவதாக வனத் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளதையடுத்து அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வனத் துறையினா், 4 கால்நடை மருத்துவா்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT