நீலகிரி

கூடலூா் பகுதியில் வீடுகளில் திடீா் விரிசல்

DIN

கூடலூா் நகரப் பகுதியில் உள்ள வீடுகளில் செவ்வாய்க்கிழமை திடீா் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் உள்ள நடுகூடலூா், ராஜகோபாலபுரம் பகுதியில் சுமாா் 10க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவா்களில் திடீரென விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. பல வீடுகளின் தரைத் தளங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குடியிருக்கும் மக்கள் அச்சம் மற்றும் குழப்பமடைந்துள்ளனா்.

வீடுகள் இடிந்துவிடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது.

இது குறித்து வருவாய்த் துறையிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினா் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

மேல்கூடலூரை அடுத்துள்ள கூடலூா்-உதகை மலைப் பாதையில் சனிபகவான் கோயில் அருகே சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளது. அந்த பிளவுக்கும் வீடுகளில் ஏற்பட்டுள்ள விரிசல்களுக்கும் தொடா்பு இருக்கலாம் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT